நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட பெண் தற்கொலை: காவல்துறை விசாரணை

அங்காரா: 

வெளிநாடுகளில் மணமகன், மணமகள் இன்றி தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் ‛சோலாகாமி' திருமண முறை நடைமுறை உள்ளது. இது சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை.

இருப்பினும், இவ்வாறு திருமணம் செய்து கொள்கின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட துருக்கியே நாட்டை சேர்ந்த குப்ரா அய்குட், 26 எனும் பெண் தனது வீட்டின் 5ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

அவரின் உடலின் அருகில் கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்ற வேட்கையில்  களமிறங்கிய அவர் தினமும் ஒரு கிலோ உடல் எடை குறைந்து வருவது வருத்தம் அளிப்பதாக கூறி தனது கடைசி வீடியோவில் பதிவிட்டார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset