செய்திகள் உலகம்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தினுள் சுற்றுப்பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
சிங்கப்பூர்:
சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம் அதன் இரண்டு UTown உணவு நிலையங்களையும் shuttle பேருந்துச் சேவையையும் பயன்படுத்தக்கூடியவர்களைக் கட்டுப்படுத்துகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் அதிக சுற்றுப்பயணிகளை எதிர்பார்ப்பதால் அத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேசியப் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே shuttle பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
அக்டோபர் 6ஆம் தேதி மட்டும் அந்தத் தடை பொருந்தாது என்று பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை Fine Food and Flavours உணவு நிலையங்களுக்குத் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டும் செல்லலாம்.
அக்டோபர் 5, 6ஆம் தேதிகளில் அந்தத் தடை பொருந்தாது.
பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைக் காட்டிய பிறகே மாணவர்களும் ஊழியர்களும் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
பல்கலைக்கழகத்தின் மத்திய நூலகமும் அந்தக் காலக்கட்டத்தின்போது மூடப்படும்.
அக்டோபர் முதல் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை சீனாவில் விடுமுறைக் காலம் என்பதால் பலர் வெளிநாட்டு விடுமுறைகளுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:10 pm
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்
October 22, 2024, 8:31 pm
இலங்கையில் புதிய வர்ணங்களில் கடவுச் சீட்டு
October 22, 2024, 3:00 pm
புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொலி வைரல்
October 22, 2024, 2:59 pm
நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
October 22, 2024, 2:57 pm
38 நாய்களுடன் நடைபயிற்சி: மிட்செல் ரூடி கின்னஸ் சாதனை
October 22, 2024, 2:56 pm
ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும்: எலோன் மஸ்க்
October 22, 2024, 10:11 am
வியட்நாமின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங் தேர்வு செய்யப்பட்டார்
October 22, 2024, 7:11 am
இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு: 109 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார்
October 19, 2024, 10:13 pm
மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவரிடம் 10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள்: ஒருவர் கைது
October 19, 2024, 9:04 pm