
செய்திகள் இந்தியா
சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து சிக்கலில் சிக்கிய கங்கனா ரணாவத் மீண்டும் மன்னிப்பு கோரினார்
சிம்லா:
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் திரும்ப கொண்டு வர வேண்டும் என்று பேசியதற்கு அவர் சார்ந்த பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகை கங்கனா ரணாவத் மீண்டும் மன்னிப்பு கோரினார்.
2021ம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து அச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.
இந்நிலையில், கங்கனா ரணாவத் நிகழ்ச்சியில் பேசுகையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சில மாநிலங்களில் மட்டுமே போராட்டம் நடந்தது. விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு வேளாண் சட்டங்களைத் திரும்ப கொண்டுவர வேண்டும் என்றார்.
இது அடுத்த மாதம் நடைபெறும் ஹரியாணா பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், கங்கனாவுக்கு கட்சிக் கொள்கை விவகாரங்களில் கருத்து தெரிவிக்க உரிமையில்லை என்றும் இதுபோன்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என்றும் பாஜக எச்சரித்தது.
இதையடுத்து, தான் தெரிவித்த கருத்துக்கு கங்கனா மன்னிப்பு கோரி விடியோ வெளியிட்டுள்ளார்.
முன்பும் இதேபோல் விவசாயிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக கங்கனா மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 5:52 pm
போர் விமானங்கள் இழந்ததை முதல் முறையாக ஒப்புக் கொண்டது இந்தியா
May 31, 2025, 4:41 pm
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 10 பேர் உயிரிழப்பு
May 28, 2025, 10:10 pm
கன்னடத்தின் பண்டைய வரலாறு நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியாது: முதல்வர் சித்தராமையா
May 27, 2025, 4:34 pm
சென்னை வந்த துபாய் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு
May 26, 2025, 7:30 pm
இந்தியாவில் 1,009 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு
May 24, 2025, 11:12 am