செய்திகள் உலகம்
சிங்கப்பூர் தொடக்கப்பள்ளி மாணவரை தாக்கிய சம்பவம்: 5 இளையர்கள் கைது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சிஹுவா (Qihua) தொடக்கப்பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 இளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஐந்து பேரும் பதின்ம வயதினர்.
சிஹுவா தொடக்கப்பள்ளி மாணவரைச் சற்று வயதில் மூத்த இளையர் ஒருவர் தாக்கும் காணொலி இவ்வாரத் தொடக்கத்தில் வெளிவந்தது.
அதன் தொடர்பில் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 5 இளையர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் காவல்துறை கூறியது.
சண்டையில் ஈடுபட்ட சந்தேகத்தில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
வன்முறையில் ஈடுபடுவதையும் சட்டத்தை அறவே மதிக்காத போக்கையும் கடுமையாகக் கருதுவதாகக் காவல்துறை சொன்னது.
குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது தெரிவித்தது.
4 நிமிடக் காணொளி Whatsapp, Telegram செயலிகளில் உலகெங்கும் வலம் வந்தது.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் இருக்கும் சிஹுவா தொடக்கப்பள்ளிச் சீருடையில் இருக்கும் இளம் மாணவரைக் கறுப்பு டீ-சட்டையும் ஜீன்ஸும் அணிந்த இளையர் தாக்குவது காணொலியில் பதிவாகியுள்ளது.
விசாரணை தொடர்வதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:10 pm
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்
October 22, 2024, 8:31 pm
இலங்கையில் புதிய வர்ணங்களில் கடவுச் சீட்டு
October 22, 2024, 3:00 pm
புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொலி வைரல்
October 22, 2024, 2:59 pm
நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
October 22, 2024, 2:57 pm
38 நாய்களுடன் நடைபயிற்சி: மிட்செல் ரூடி கின்னஸ் சாதனை
October 22, 2024, 2:56 pm
ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும்: எலோன் மஸ்க்
October 22, 2024, 10:11 am
வியட்நாமின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங் தேர்வு செய்யப்பட்டார்
October 22, 2024, 7:11 am
இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு: 109 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார்
October 19, 2024, 10:13 pm
மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவரிடம் 10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள்: ஒருவர் கைது
October 19, 2024, 9:04 pm