நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் தொடக்கப்பள்ளி மாணவரை தாக்கிய சம்பவம்: 5 இளையர்கள் கைது

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் சிஹுவா (Qihua) தொடக்கப்பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 இளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஐந்து பேரும் பதின்ம வயதினர்.

சிஹுவா தொடக்கப்பள்ளி மாணவரைச் சற்று வயதில் மூத்த இளையர் ஒருவர் தாக்கும் காணொலி இவ்வாரத் தொடக்கத்தில் வெளிவந்தது.

அதன் தொடர்பில் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 5 இளையர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் காவல்துறை கூறியது.

சண்டையில் ஈடுபட்ட சந்தேகத்தில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

வன்முறையில் ஈடுபடுவதையும் சட்டத்தை அறவே மதிக்காத போக்கையும் கடுமையாகக் கருதுவதாகக் காவல்துறை சொன்னது.

குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது தெரிவித்தது.

4 நிமிடக் காணொளி Whatsapp, Telegram செயலிகளில் உலகெங்கும் வலம் வந்தது.

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் இருக்கும் சிஹுவா தொடக்கப்பள்ளிச் சீருடையில் இருக்கும் இளம் மாணவரைக் கறுப்பு டீ-சட்டையும் ஜீன்ஸும் அணிந்த இளையர் தாக்குவது காணொலியில் பதிவாகியுள்ளது.

விசாரணை தொடர்வதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

ஆதாரம் : CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset