நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு தாய்லாந்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம்

பேங்காக்:

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் தாய்லாந்து விளங்குகிறது.

இருப்பினும் தாய்லாந்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கப்படாமல் இருந்தது.

இதனால் ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகக் கடுமையான எதிர்ப்பை எதிர் கொண்டனர்.

மேலும் அவர்கள், தங்களுடைய திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அந்த நாட்டின் மன்னரின் ஒப்புதலுக்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணச் சட்டமசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டின் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset