செய்திகள் உலகம்
ஹசீனா வாய்மூடி அமைதியாக இருக்க வேண்டும்: முஹம்மது யூனுஸ் எச்சரிக்கை
டாக்கா:
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேச அரசியல் சூழல் குறித்து கருத்துகளைக் கூறாமல் வாய்மூடி அமைதியாக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் இடைக்கால அரசின் தலைவர் முஹம்மது யூனுஸ் தெரிவித்தார்.
அவரது கருத்துகளால் இரு நாட்டு உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் அவர் எச்சரித்தார்.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின்போது பயங்கரவாதச் செயல்கள், கொலைக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹசீனா வெளியிட்ட அறிக்கையை அமெரிக்காவில் உள்ள அவரது மகன் சஜீப் வாஜீத் ஜாய் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த யூனுஸ், இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே வங்கதேசம் விரும்புகிறது. ஆனாலும் ஹசீனா இல்லையென்றால் ஆப்கானிஸ்தான்போல் வங்கதேசம் மாறிவிடும் என்பதைப்போல் அவரது கட்சியினர் கொண்டு செல்கின்றனர்.
ஷேக் ஹசீனா, வங்கதேச அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிப்பதை இங்கு யாரும் விரும்பவில்லை. அவர் வாய்மூடி அமைதியாக இருந்தாலே அனைவரும் அவரை மறந்துவிடுவார்கள்.
ஹசீனாவின் பேச்சால் இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து இந்திய அரசிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவை மீண்டும் வங்கதேசம் அழைத்து வந்து, அவர் மக்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும்.
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி அதை மிகைப்படுத்துகின்றனர் என்றார் முஹம்மது யூனுஸ்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 4:58 pm
மூன் கேக் சைவமா, அசைவமா?: BreadTalk விளம்பரத்தால் குழப்பம்
September 16, 2024, 1:55 pm
"தோப்பாகிய தனிமரம்" எம்.எச்.எம். அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்
September 16, 2024, 11:15 am
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்: அமெரிக்காவில் பரபரப்பு
September 16, 2024, 10:25 am
சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய் நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து
September 15, 2024, 1:48 pm
லடாக் எல்லையின் 4 பகுதிகளில் இருந்து படை விலகல்: சீனா முதல் முறையாக ஒப்புதல்
September 14, 2024, 11:32 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பயணி வெளியேற்றம்
September 14, 2024, 7:46 pm
இலங்கை அதிபர் தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை
September 14, 2024, 4:47 pm
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவருமே மனித வாழ்க்கைக்கு விரோதமானவர்கள்: போப் பிரான்சிஸ்
September 14, 2024, 11:46 am