செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும்: பிரதமர் மோடி
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தமிழ் மொழி, நாகரிகம், பண்பாட்டைப் பரப்பும் வகையில் கலாச்சாரம் மையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையிலும், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருத்துவம், கல்வி, திறன் மேம்பாடு, செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அத்துடன், சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமரிடம் மோடி உறுதி அளித்தார்.
இந்தியாவின் கலாசாரத்தை வெளிப்படுத்த, யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள் பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாகக் கலாச்சார மையம் அமைய உள்ளது.
உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் நிறுவப்படும் என மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் பாஜக அறிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம், இந்தியாவின் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 4:58 pm
மூன் கேக் சைவமா, அசைவமா?: BreadTalk விளம்பரத்தால் குழப்பம்
September 16, 2024, 1:55 pm
"தோப்பாகிய தனிமரம்" எம்.எச்.எம். அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்
September 16, 2024, 11:15 am
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்: அமெரிக்காவில் பரபரப்பு
September 16, 2024, 10:25 am
சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய் நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து
September 15, 2024, 1:48 pm
லடாக் எல்லையின் 4 பகுதிகளில் இருந்து படை விலகல்: சீனா முதல் முறையாக ஒப்புதல்
September 14, 2024, 11:32 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பயணி வெளியேற்றம்
September 14, 2024, 7:46 pm
இலங்கை அதிபர் தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை
September 14, 2024, 4:47 pm
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவருமே மனித வாழ்க்கைக்கு விரோதமானவர்கள்: போப் பிரான்சிஸ்
September 14, 2024, 11:46 am