செய்திகள் உலகம்
மாணவர் அமைப்பு விதித்த கெடு; வங்காளதேசத்தின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசான் பதவி விலகல்
டாக்கா:
வங்காளதேசத்தில் மாணவர் அமைப்பினர் மேற்கொண்ட போராட்டத்தினால் நடப்பு அரசாங்கம் கலைக்கப்பட்டது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவும் பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவிற்குத் தப்பியோடினார்
இந்நிலையில், வங்கதேசத்தின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒபைதுல் ஹசான் பதவி விலகியுள்ளார்.
தலைமை நீதிபதி பதவி விலக வேண்டும் மாணவர்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார் ஒபைதுல் ஹசான். நாட்டிலுள்ள இதர நீதிபதிகளின் பாதுகாப்பு, நலன்களை முன்னிருத்து அவர் தனது தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளார்.
வங்காளதேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அரசாங்கத்திற்கு பேராசிரியர் முஹம்மத் யூனுஸ் தலைமையேற்றுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 4:58 pm
மூன் கேக் சைவமா, அசைவமா?: BreadTalk விளம்பரத்தால் குழப்பம்
September 16, 2024, 1:55 pm
"தோப்பாகிய தனிமரம்" எம்.எச்.எம். அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்
September 16, 2024, 11:15 am
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்: அமெரிக்காவில் பரபரப்பு
September 16, 2024, 10:25 am
சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய் நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து
September 15, 2024, 1:48 pm
லடாக் எல்லையின் 4 பகுதிகளில் இருந்து படை விலகல்: சீனா முதல் முறையாக ஒப்புதல்
September 14, 2024, 11:32 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பயணி வெளியேற்றம்
September 14, 2024, 7:46 pm
இலங்கை அதிபர் தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை
September 14, 2024, 4:47 pm
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவருமே மனித வாழ்க்கைக்கு விரோதமானவர்கள்: போப் பிரான்சிஸ்
September 14, 2024, 11:46 am