நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாணவர் அமைப்பு விதித்த கெடு; வங்காளதேசத்தின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசான் பதவி விலகல்

டாக்கா: 

வங்காளதேசத்தில் மாணவர் அமைப்பினர் மேற்கொண்ட போராட்டத்தினால் நடப்பு அரசாங்கம் கலைக்கப்பட்டது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவும் பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவிற்குத் தப்பியோடினார் 

இந்நிலையில், வங்கதேசத்தின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒபைதுல் ஹசான் பதவி விலகியுள்ளார். 

தலைமை நீதிபதி பதவி விலக வேண்டும் மாணவர்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

தனது பதவி விலகல் கடிதத்தை சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார் ஒபைதுல் ஹசான். நாட்டிலுள்ள இதர நீதிபதிகளின் பாதுகாப்பு, நலன்களை முன்னிருத்து அவர் தனது தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளார். 

வங்காளதேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அரசாங்கத்திற்கு பேராசிரியர் முஹம்மத் யூனுஸ் தலைமையேற்றுள்ளார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset