நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

தோக்கியோ:

ஜப்பானின் கியூஷு, ஷிகோகூ வட்டாரங்களை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

அதன் பின்னர் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கியூஷு , ஷிகோகூ வட்டாரங்களை 1 மீட்டர் உயரமுள்ள அலைகள் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே சில பகுதிகளை 20 செண்டிமீட்டர் உயரமுள்ள அலைகள் எட்டியதாகக் கூறப்படுகிறது.

முதல் நிலநடுக்கம் 33 கிலோமீட்டர் ஆழத்திலும் இரண்டாவது நிலநடுக்கம் 25 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டன.

அதிர்வுகள் ஒசாக்கா, தோக்கியோ ஆகிய இடங்களிலும் உணரப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஜப்பான் நெருப்பு வளையம் எனும் நிலநடுக்கங்கள் அதிகம் நிகழும் பகுதியில் அமைந்துள்ளது. அந்தப் பகுதி பசிபிக் பெருங்கடலில் உள்ளது.

கடலில் ஒரு மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் கடலோர பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset