நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் 4 சீனர்கள் பலி

காத்மாண்டு:

நேபாளத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 4 சீன சுற்றுலாப் பயணிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் காத்மாண்டுக்கு 30 கி.மீ. தொலைவில் உள்ள நுவாகோட் மாவட்டத்தின் மலைப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், நேபாளத்தைச் சேர்ந்த விமானி, 4 சீன சுற்றுலாப் பயணிகள் என ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

காத்மாண்டிலுள்ள திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 3 நிமிஷங்களில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் கூறினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset