நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் வேட்பாளரை வெற்றி பெற ஒற்றுமை அரசாங்கம் சரியான வழிமுறையைக் கொண்டுள்ளது: ஜாஹித்

கோலாலம்பூர்:

கோல குபு பாருவில் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய ஒற்றுமை அரசாங்கம் சரியான வழிமுறையைக் கொண்டுள்ளது என்று துணைப் பிரதமரும் அம்னோ துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் வேட்பாளர் இந்த தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.

இந்த வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்.

அதே வேளையில் இந்த வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஒற்றுமை அரசு கொண்டுள்ளது.

ஆகையால் அத் தேர்தலில் ஒற்றுமை அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்று டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset