நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலி; நால்வர் படுகாயம் 

பாசிர் சாலாக்: 

தஞ்சோங் துவாலாங் சாலையிலிருந்து கம்போங் காஜா நோக்கி செல்லும் சாலையில் நேற்றிரவு இரு வாகனங்கள் மோதிக் கொண்ட சாலை விபத்தில் ஒருவர் மரணமடைந்த நிலையில் நால்வர் படுகாயமடைந்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக இரவு 7.16 மணியளவில் அவர் தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், கம்போங் காஜா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 16 தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உறுப்பினர்கள் சமபவ இடத்திற்கு விரைந்ததாகவும் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹம்மத் ஓர் அறிக்கையில் கூறினார். 

பெரோடுவா கன்சில் மற்றும் புரோட்டான் பெர்டானா ஆகிய இரு கார்கள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  வாகனங்களில் விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

பெரோடுவா கன்சிலில் மொத்தம் நான்கு பேர் பயணித்த நிலையில் புரோட்டான் பெர்டானா காரில் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார். 

இதில் கன்சில் காரில் பயணம் செய்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset