
செய்திகள் இந்தியா
மாற்றுத் திறனாளி குழந்தையைக் கொன்றவருக்கு சவூதியில் மரண தண்டனை: கேரள நபரை காப்பாற்ற ரூ.34 கோடி வழங்கிய மக்கள்
திருவனந்தபுரம்:
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நபரை காப்பாற்றுவதற்காக அந்த மாநில மக்களிடம் இணையவழியில் ரூ.34 கோடி பொது நிதி திரட்டப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சோ்ந்த அப்துல் ரஹீம் என்பவா், சவூதி அரேபியாவில் தனது பராமரிப்பில் இருந்த அந்நாட்டு சிறுவனை கொலை செய்ததாக கடந்த 18 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறாா்.
மாற்றுத் திறனாளியான அந்த சவூதி சிறுவனின் மரணத்துக்கு எதிா்பாராதவிதமாக ரஹீம் காரணமாகிவிட்டதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.
சிறுவனின் குடும்பத்தினா் ரஹீமை மன்னிக்க முன்வராத காரணத்தால், கடந்த 2018-ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனை உறுதியானது.
இதனிடையே, ரஹீமை மன்னிக்க ஒப்புக்கொண்ட சிறுவனின் குடும்பம், தங்களுக்கு இழப்பீடாக ஏப்ரல் 18-ஆம் தேதிக்குள் 15 மில்லியன் சவூதி ரியால் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.34 கோடி) வழங்க வேண்டுமென கோரியது.
இதையடுத்து, ரஹீமை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கிய ஒரு குழுவினா், பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் இணையவழியில் பொது நிதி திரட்டும் (கிரெளட் ஃபண்டிங்) முயற்சியை முன்னெடுத்தனா். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி மூலம் ஆயிரணக்கான மக்களிடமிருந்து ரூ.34 கோடி திரட்டப்பட்டுள்ளது.
கொலையாளி அப்துல் ரஹீம்
சில நாள்களுக்கு முன்பு வரை சொற்ப நிதியே திரட்டப்பட்டிருந்ததாகவும், கடந்த 4 நாள்களில் மிகப் பெரிய அளவில் நிதி திரட்டப்பட்டதாகவும் அந்த குழுவினா் தெரிவித்தனா்.
இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, இதுதான் கேரளத்தின் உண்மையான கதை என்று முதல்வா் பினராயி விஜயன் பாராட்டியுள்ளாா். மனிதாபிமான நோக்கத்துக்காக கைகோத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.
அந்த நிதி முழுவதையும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் மருத்துவமனைக்கு வழங்க உள்ளதாக அந்த சவூதி குடும்பம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 10:40 am
தீபாவளி பண்டிகைக்காக அயோத்தியில் 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை
October 19, 2025, 6:54 pm
தீபாவளி சொகுசுப் பலகாரம்: ஒரு கிலோ RM5330
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 7:00 pm
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
October 18, 2025, 6:40 pm
டிரம்ப்புக்கு எதிராக மவுன சாமியார் ஆகிவிடுகிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் சாடல்
October 18, 2025, 5:33 pm
பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா
October 18, 2025, 2:50 pm
ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்
October 18, 2025, 2:14 pm
குஜராத் மாநிலத்தில் புதிய அமைச்சரவை: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி அமைச்சர் ஆனார்
October 17, 2025, 4:14 pm