நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குவாந்தான் வனப்பகுதியில் தீ; களப்பார்வையிட்டார் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல் முஸ்தஃபா பில்லா ஷா 

 

குவாந்தான்: 
பஹாங் குவாந்தனில் உள்ள இந்திராபுரா ஜெயா பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கடுமையான தீ ஏற்பட்ட நிலையில் அதனை தீயணைப்பு படையினர் மும்முரமாக அணைத்தனர். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட வனப்பகுதிகளை பஹாங் மாநில சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தஃபா பில்லா நேரடியாக வருகை தந்து பார்வையிட்டதுடன் தீயணைப்பு அதிகாரிகளையும் நலம் விசாரித்தார். 

பிறகு, தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், வனத்துறை அதிகாரிகளுடன் அல்-சுல்தான் அப்துல்லா நோன்பு துறந்தார். அனைவருக்கும் சுல்தான் அப்துல்லா பேரிச்சம்பழம் வழங்கினார். 

சுல்தான் அப்துல்லாவுடன் அவர் மகனும் பஹாங் மாநில பட்டத்து இளவரசருமான தெங்கு ஹஸ்ஸானால் இப்ராஹிம் அலாம் ஷாவும் உடன் வந்திருந்தார். 

முன்னதாக, பஹாங் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெப்பம், வறட்சி காரணமாக அங்குள்ள வனப்பகுதிகள் திடீரென்று தீப்பிடித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset