நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து தரப்பினரின் கருத்தும் ஆலோசனைகளையும் மித்ரா வரவேற்கும்: பிரபாகரன்

பூச்சோங்:

அனைத்து தரப்பினரின் கருத்தும் ஆலோசனைகளையும் மித்ரா வரவேற்கும் என்று அதன் நடவடிக்கை குழுத் தலைவர் பிரபாகரன் கூறினார்.

இந்திய சமுதாய மக்களின் உருமாற்றத்திற்கான ஒதுக்கப்பட்ட நிதி முறையாக மக்களை சென்றடைய வேண்டும்.

இதை இலக்காக கொண்டு தான் மித்ரா சிறப்பு நடவடிக்கை குழு செயல்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் இந்த நடவடிக்கை குழு வரவேற்கும்.

விரைவில் நடவடிக்கை குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விவாதிக்கப்படும்.

அதன் வாயிலாக நடவடிக்கைகளும் திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக இவ்வாண்டுக்கான நிதி முழுமையாக பயன்படுத்தப்படும் என்று பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset