நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ: 

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. 

இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்குத் தொடர்பு இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டினார். 

அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னி போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன.

தங்களிடமுள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிப்பதாக அவர் கூறினார்.

இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன.

மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷ்யாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset