நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் இரண்டாவது முறையாக பிரதமராக வேண்டும் என்பது  எங்கள் கனவு: சைபுடின்

கோலாலம்பூர்:

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி வகிப்பார் என கெஅடிலான் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ  சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்போது முதல் தவணை. இறைவன் விரும்பினால் இரண்டாவது தவணைக்குள் அவர் நுழைய வேண்டும். 

அதுதான் எங்கள் கனவு என்று கெலுவார் செக்ஜாப் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.

அன்வாரின் உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்த அவர், தோள்பட்டை, முதுகு காயங்கள் தவிர, பிரதமர் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் அவர் என்னை விட ஆரோக்கியமாக இருக்கிறார்.

முன்னாள் பரம எதிரியான தேசிய முன்னணியுடன் அரசாங்கத்தை வெற்றிகரமாக ஒன்றிணைத்த பின்னர்  மலேசியாவின் 10ஆவது பிரதமராக அன்வார் பதவியேற்றார்.

இருப்பினும், புத்ராஜெயாவை வழிநடத்தும் பிகேஆர் தலைவரின் பயணம் அவ்வளவு சுமுகமாக இல்லை.

ஒரு சீர்திருத்தவாதியால் வழிநடத்தப்பட்ட போதிலும், சீர்திருத்தங்களை செயல்படுத்துவது மெதுவாக இருப்பதாக விமர்சகர்கள் மீண்டும் மீண்டும் விமர்சிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset