நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களிடையே பிரிவினையல்ல அமைதியை எதிர்ப்பார்க்கின்றோம்: ஆரோன் 

புத்ராஜெயா:

கேகே சூப்பர் மார்ட்டில் அல்லாஹ் வார்த்தை அச்சிடப்பட்ட காலுறைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் உள்துறை அமைச்சகத்திடம் முழுமையாக ஒப்படைத்துள்ளது. 

அமைச்சகம் ஒற்றுமையை விரும்புகிறது. சமூகத்தில் பிளவு ஏற்படுவதை விரும்பவில்லை என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சகம் எந்த அறிக்கையும் வெளியிடாது என்றும், உள்துறை அமைச்சகம் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மார்ச் 13-ஆம் தேதி கேகே சூப்பர் மார்ட்டில் அல்லாஹ் என்ற வார்த்தை அச்சிடப்பட்ட காலுறைகள் விற்கப்பட்டது தொடர்பான காணொலி பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset