நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேடிஎம் ரயில் மோதி 3 வங்காளதேச ஆடவர்கள் பலி

காஜாங்:

கேடிஎம் கம்யூட்டர் ரயில் மோதி மூன்று வங்காளதேச ஆடவர்கள் மரணமடைந்தனர்.

இந்த சம்பவம் காஜாங் தாமான் புன்சாக் உத்தாமாவில் நிகழ்ந்து என்று சிலாங்கூர் தீயணைப்புப் படையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

நேற்று இரவு 10.53 மணியளவில் தீயணைப்புப் படைக்கு அழைப்பு வந்தது.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ரயில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்த மூன்று ஆடவர்களை ஒரு பயணி ரயில் மோதி தள்ளியது.

விபத்தில் சிக்கிய அனைவரும் இறந்து விட்டதாக மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.

மரணமடைந்தவர்கள் அனைவரும் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாவர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset