நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல்வாதிகளை இஸ்லாமிய சமயப் பிரிவின் அமைச்சராக நியமிக்காத நடைமுறையைக் கடைப்பிடியுங்கள்: சிலாங்கூர் சுல்தான் அறிவுரை

பெட்டாலிங் ஜெயா:

இஸ்லாமிய சமய  விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக அரசியல்வாதி அல்லாதவர்களை நியமிக்கும் வழக்கம் தொடர வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுஃடின் இத்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார். 

இஸ்லாமிய சமய விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை அரசியலுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

மேலும், முஸ்லிம்களின் மார்க்கப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அமைச்சர் முழு கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் நடந்த மலேசிய தேசிய இஸ்லாமிய சமய விவகார உச்சமன்றக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், 

இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கும் போது இஸ்லாமிய கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் உயர் கல்வித் தகுதியுடையவர்களாகவும் நியமிக்க தாம் பரிந்துரை செய்வதாகவும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset