செய்திகள் இந்தியா
தெருநாய்க் கடிக்கு ஒரு பல் பதிவுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்
சண்டீகர்:
தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பல் பதிவுக்கும் ரூ. 10,000 வீதம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த மாநில அரசுகளுக்கு பஞ்சாப் ஹரியாணா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாய்கள் உள்ளிட்ட தெருவில் சுற்றித்திரியும் விலங்குகளால் பாதிக்கப்படுவர்களுக்கு உரிய நிவாரணம் வழக்கக் கோரி 193 மனுக்கள் பஞ்சாப் ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் மீது நீதிபதி வினோத் எஸ்.பரத்வாஜ் அளித்த தீர்ப்பில், இதற்கான நிவாரணத் தொகையை வழங்கும் பொறுப்பு மாநில அரசுடையதாகும். இந்தத் தொகையை பாதிப்புக்கு காரணமான நிறுவனம் அல்லது தனி நபரிடமிருந்து மீட்டு, பாதிக்கப்பட்ட நபருக்கு மாநில அரசு அளிக்கலாம்.
இந்த நிவாரணத் தொகையுடன், தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு பல் பதிவுக்கு ரூ. 10,000 வீதம் நிவாரணம் கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபருக்கு நாய் கடித்ததில் உடலில் சதை இழப்பு ஏற்பட்டிருந்தால், 0.2 செ.மீ. சதை இழப்புக்கு ரூ. 20,000 வீதம் கணக்கிட்டு கூடுதல் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm
