செய்திகள் உலகம்
அஜர்பைஜான் - ஆர்மீனியாவுக்கும் இடையே போர் பதற்றம்: ஐ.நா. அவசர ஆலோசனை
நியூயார்க்:
சாலைப் போக்குவரத்தை அஜர்பைஜான் படையினர் முடக்கியுள்ளதால், அண்டை நாடான ஆர்மீனியாவுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தணிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது.
சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆர்மீனியாவுக்கும், அஜர்பைஜானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.
சர்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தில் ஆர்மீனியாவும், அஜர்பைஜானும் தங்களது படைகளைக் குவித்துள்ளன. இதனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகார்னோ-கராபக் பிராந்தியத்தில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே 2020இல் நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அதைத் தடுக்க ஐ.நா.வின் அவசர கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am