நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யா தாக்குதலில் பிறந்த குழந்தை உட்பட எழுவர் மரணம் 

உக்ரைன் : 

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது. அதற்கு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா வழங்கியக் குண்டுகளையும் பயன்படுத்தி வருகிறது.

உக்ரைன் டிரோன்களை ரஷ்யா இடைமறித்து அழித்தபோதிலும், உடனடியாக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு தினங்களுக்கு முன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள டொனேட்ஸ்க் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதியில் உக்ரைன் குண்டுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டியிருந்தது. 

இந்த நிலையில் நேற்றிரவு கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

பிறந்து 23 நாட்களே ஆன பெண் குழந்தை, தனது 12 வயது சகோதரர் மற்றும் தந்தையுடன் உயிரிழந்துள்ளது. ஸ்டானிஸ்லேவ் கிராமத்தில் நடைபெற்ற தாக்குதலில் கிறிஸ்துவ பாதிரியார் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset