நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் அதிபரிடமிருந்து ஜாஸா பக்தி விருது பெற்றார் ஃபாரியுல்லாஹ்

சிங்கப்பூர்:

சமூக சேவையை அங்கீகரித்து,  சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றம் சார்பில், மேதமிகு அதிபர் திருமதி ஹலீமா யாக்கூப் அவர்கள் நேற்று சிங்கப்பூர் இந்திய ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் தலைவரும், முன்னாள் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவரும், மூத்த சமூக அடித்தளத் தலைவருமான ஹாஜி ஃபாரியுல்லாஹ் பின் அப்துல் வஹாப் சஃபியுல்லாஹ் (Farihullah Safiullah) அவர்களுக்கு விருதை வழங்கி கௌரவப்படுத்தினார். 

சிங்கப்பூரில் பல்வேறு சமூக அறப் பணிகளில் ஃபாரியுல்லாஹ் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

அவரது தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வண்ணம் சிங்கப்பூர் அதிபர் ஹலீமா யாக்கூப் விருது வழங்கி சிறப்பித்தார்.

மென்மேலும் சிறந்த வகையில் சமூகப் பணியாற்றி விருதாளருக்கு சிங்கப்பூர் பிரமுகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சீருடையார்புரம் முஹம்மது பிலால், நாகப்பட்டினம் சங்கத்தைச் சேர்ந்த சலாஹுத்தீன், புதியநிலா மு ஜஹாங்கீர், நல்லாசிரியர் ஜாகுர் ஹுசைன் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset