நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சொகுசுக் கப்பலிலிருந்து பயணி ஒருவர் கடலுக்குள் விழுந்தார்; தேடும் பணி தொடர்கிறது: சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம்

சிங்கப்பூர்:

சொகுசுக் கப்பலிலிருந்து பயணி ஒருவர் கடலுக்குள் விழுந்ததாகச் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியுள்ளது. அந்த கப்பலின் பெயர் Spectrum of the Seas ஆகும்.

சிங்கப்பூரை நோக்கிக் கப்பல் வந்தபோது அவர் சிங்கப்பூர் நீரிணையில் விழுந்ததாகக் கூறப்பட்டது.

சம்பவத்தைப் பற்றி நேற்று (31 ஜூலை) காலை சுமார் 7.50 மணிக்குக் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததாக ஆணையம் சொன்னது.

அந்த வட்டாரத்தில் உள்ள கப்பல்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவை தண்ணீரில் யாரும் கண்டுபிடிக்கப்பட்டால் விவரம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல் சிங்கப்பூரில் அணைந்துள்ளது. அது விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் சொன்னது.

ஆதாரம் : CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset