நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெண் எழுத்தாளரிடம் பாலியல் துஷ்பிரயோகம்: டொனால்டு டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு

நியூயார்க்: 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது 12 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். இதில் பெண் எழுத்தாளர் இ.ஜீன் கரோலும் ஒருவர். 

இ.ஜீன் கரோல் 1990-ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்தார் என்று குற்றம்சாட்டினார்.

ஆனால் ஜீன் கரோல் குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். நான் அப்படி செய்யவில்லை.

இது தொடர்பாக ஜீன் கரோல், நியூயார்க்கில் உள்ள கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில் நியூயார்க் நீதிமன்ற நீதிபதி லூயிஸ் சுப்லான் பெண் எழுத்தாளரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததில் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார்.

மேலும், ஜீன் கரோலைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கும் அவரை அவமதிப்பு செய்ததற்கும் டிரம்ப் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். 

அதேசமயம்,  டிரம்ப் தன்னைக் கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறிய குற்றச்சாட்டை நீதிபதி நிராகரித்தார். அதற்கான அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தார். 

ஜீன் கரோலைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவருக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார். 

ஜீன் கரோலை நான் ஒரு போதும் பாலியல் வன் கொடுமை செய்யவில்லை. அவரை எனக்கு யாரென்றே தெரியாது. இந்தத் தீர்ப்பு தனக்கு நேர்ந்த அவமானம் என்று இந்தத் தீர்ப்பு தொடர்பாக டிரம்ப்பு கருத்து தெரிவித்தார். 

இதனிடையே அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள டிரம்ப்புக்கு இந்தத் தீர்ப்பு பின்னடைவாக அமைந்துள்ளது.

ஆதாரம்: வாஷிங்டன்போஸ்ட்

தொடர்புடைய செய்திகள்

+ - reset