நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - சிறுமி உள்பட 6 பேர் பலி

திருச்சி: 

திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. 

அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் காரில் இருந்து சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 6 பேரும் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset