நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் MU - நியூகாஸ்டல் மோதல்

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு  மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் முன்னேறி உள்ளனர்.

ஓல்ட் டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற இரண்டாவரது அரையிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் நோட்டிங்ஹாம் ஃபோரஸ்ட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் நோட்டிங்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை அந்தோனி மார்ஷியல், பிராட் ஆகியோர் அடித்தனர்.

இரு ஆட்டங்களின் வாயிலாக 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னெறி உள்ளனர்.

பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறும் இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் நியூகாஸ்டல் அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset