செய்திகள் இந்தியா
ஏர் இந்தியாவில் சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன்
புது டெல்லி:
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ராவுக்கு தில்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கிலிருந்து தில்லி வந்த ஏர் இந்திய விமானத்தில் பயணித்த சங்கர் மிஸ்ரா, 70 வயது பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாகக் குற்றறச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அந்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில், பெங்களூரில் இருந்த சங்கர் மிஸ்ராவை தில்லி போலீஸார் ஜன7ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணையின்போது தில்லி காவல்துறை அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டது.
அவருக்கு ஜாமீன் வழங்க ஜனவரி 11 ஆம் தேதி கீழ் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து தில்லி நீதிமன்றத்தில் சங்கர் மிஸ்ரா மேல் முறையீடு செய்தார்.
சங்கர் மிஸ்ரா ரூ. 1 லட்சம் பிணை பத்திரம் அளிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 17, 2025, 3:54 pm
உம்ராவிற்குச் சென்ற 42 இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்
November 16, 2025, 2:40 pm
100 தோப்புக்கரணம் போட்டதால் 6 வகுப்பு மாணவி மரணம்
November 16, 2025, 10:54 am
114 வயதில் காலமான மரங்களின் தாய் என்றழைக்கப்பட்ட திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
November 14, 2025, 11:31 am
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம்
November 13, 2025, 9:09 pm
வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
