செய்திகள் இந்தியா
ஏர் இந்தியாவில் சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன்
புது டெல்லி:
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ராவுக்கு தில்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கிலிருந்து தில்லி வந்த ஏர் இந்திய விமானத்தில் பயணித்த சங்கர் மிஸ்ரா, 70 வயது பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாகக் குற்றறச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அந்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில், பெங்களூரில் இருந்த சங்கர் மிஸ்ராவை தில்லி போலீஸார் ஜன7ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணையின்போது தில்லி காவல்துறை அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டது.
அவருக்கு ஜாமீன் வழங்க ஜனவரி 11 ஆம் தேதி கீழ் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து தில்லி நீதிமன்றத்தில் சங்கர் மிஸ்ரா மேல் முறையீடு செய்தார்.
சங்கர் மிஸ்ரா ரூ. 1 லட்சம் பிணை பத்திரம் அளிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 8:43 pm
டெல்லி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்
April 16, 2026, 5:05 pm
கோவையில் துயரம்: 3-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
April 16, 2026, 4:42 pm
ஆக்ராவில் அரங்கேறிய கொடூர நாடகம்: தான் இறந்ததாகக் காட்ட பிச்சைக்காரரைக் கொன்ற முன்னாள் காவலர்
April 16, 2026, 4:23 pm
மும்பையில் பரபரப்பு: திருமண ஆசை காட்டி புது மாப்பிள்ளைகளை ஏமாற்றிய ‘மாயக் கன்னி’
April 14, 2026, 5:40 pm
மழைக்கால வெள்ளத்திற்கு முற்றுப்புள்ளி: நவீன 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் புதிய வடிகால் அமைப்பு
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 10:17 am
மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: பீகாரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மீட்பு
April 12, 2026, 5:13 pm
