
செய்திகள் இந்தியா
ஏர் இந்தியாவில் சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன்
புது டெல்லி:
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ராவுக்கு தில்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கிலிருந்து தில்லி வந்த ஏர் இந்திய விமானத்தில் பயணித்த சங்கர் மிஸ்ரா, 70 வயது பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாகக் குற்றறச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அந்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில், பெங்களூரில் இருந்த சங்கர் மிஸ்ராவை தில்லி போலீஸார் ஜன7ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணையின்போது தில்லி காவல்துறை அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டது.
அவருக்கு ஜாமீன் வழங்க ஜனவரி 11 ஆம் தேதி கீழ் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து தில்லி நீதிமன்றத்தில் சங்கர் மிஸ்ரா மேல் முறையீடு செய்தார்.
சங்கர் மிஸ்ரா ரூ. 1 லட்சம் பிணை பத்திரம் அளிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2023, 1:43 pm
ஹிந்துத்துவம் குறித்து ட்விட்டரில் கருத்து: கன்னட நடிகர் கைது
March 22, 2023, 12:03 am
10 பேருக்கு விமானங்களில் பறக்க தடை
March 21, 2023, 10:01 pm
ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகள் வராதது ஏன்?
March 21, 2023, 9:24 pm
கேரள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வெற்றி செல்லாது
March 19, 2023, 6:40 pm
பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி இஸட் பிளஸ் பாதுகாப்புடன் வலம்வந்த குஜராத் நபர் பலே மோசடி
March 19, 2023, 5:47 pm
கிழக்கு லடாக் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது
March 18, 2023, 4:04 pm
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
March 17, 2023, 4:10 pm
அதானி விவகாரத்தில் தப்பிக்கவே பாஜக நாடாளுமன்றத்தை முடக்குகிறது: காங்கிரஸ் தலைவர்
March 17, 2023, 3:49 pm
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரே நிலைதான்: மெஹபூபா முஃப்தி
March 16, 2023, 2:01 pm