நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கொரியா டென்னிஸ் போட்டி இறுதிப் போட்டியில் ஆஸ்டாபென்கோ 

சியோல்:

கொரியா பொது  பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது. 

இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ, எம்மா ரடுகானுவை (இங்கிலாந்து) எதிர்கொண்டார். 

இதில் ஆஸ்டாபென்கோ 4-6, 6-3, 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது எம்மா ரடுகானு காயம் காரணமாக விலகினார். 

இதனால் ஆஸ்டாபென்கோ இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 24-வது இடத்தில் இருக்கும் எகதேரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷியா) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset