நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரானின் இயற்கை எரிவாயு வயல் மீதான தாக்குதலால் அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்?

வாஷிங்டன்: 

ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் Benjamin Netanyahu இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. அதை செய்ய வேண்டாம் என நெதன்யாகுவிடம் நான் சொல்லி இருந்தேன்” என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

ஈரான் பதிலடி​யாக சவுதி அரேபி​யா​வின் யான்பு துறை​க​முத்​தில் உள்ள அராம்கோ எண்​ணெய் நிறு​வனத்​தின் சாம்​ரெஃப் சுத்திகரிப்பு நிலை​யம் மீது  ட்ரோன் drone மூலம் தாக்​குதல் நடத்​தி​யது. மேலும் கத்​தார், ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள இயற்கை எரி​வாயு மையங்​கள், குவைத்​தில் உள்ள 2 எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள் மீதும் தாக்​குதல் நடத்​தி​யது.

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கப்​பல்போக்​கு​வரத்தை ஈரான் தடுத்​ததன் காரண​மாக, கச்சா எண்​ணெய் விநி​யோகம் ஏற்​கெனவே பாதிக்கப்​பட்டு உலகம் போராடி வரும் நிலை​யில், கச்சா எண்​ணெய் உற்​பத்தி ஆலைகளுக்கு ஏற்​படும் எந்​தவொரு சேத​மும் பல ஆண்டுகளுக்கு தாக்​கத்தை ஏற்​படுத்​தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset