நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் அபாரம்

லிஸ்பன்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

வாஸ்கன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் அர்மேனியா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துகல் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் அர்மேனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

போர்த்துகல் அணிக்காக அதன் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை ஜோய் பெலிக்ஸ், ஜோய் கான்சாலோ ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் செர்பியா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் லட்வியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset