நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும்

புதுடெல்லி: 

இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இம்முறை டி20 வடிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன.

‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் செப்டம்பர் 10-ல் மோதுகிறது.

14ஆம் தேதி பாகிஸ்தானுடனும், 19ம் தேதி ஓமனையும் எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.

பல்​வேறு நாடு​கள் பங்​கேற்​கும் போட்​டி​யில் இந்​திய அணி பங்​கேற்​கலாம். அதே​நேரத்​தில் அந்​தப் போட்​டியை பாகிஸ்​தான் நடத்​தி​னால், அதில் இந்​தியா பங்​கேற்​பது தொடர்​பாக விவா​திக்​கப்​படும். இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​களுக்கு இடையே உள்ள பதற்​றம் தணிந்​தால் இரு நாடு​களுக்கு இடையி​லான போட்​டிகள் நடத்​தப்​படுமா என்​பது தெரிய​வில்​லை. தற்​போதைய நிலை​யில் அது சாத்​தி​யமில்​லை.

சர்​வ​தேச போட்​டிகளில் இந்​தி​யா​வைச் சேர்ந்த விளை​யாட்டு அணி​களும், தனிப்​பட்ட வீரர்​களும் பங்​கேற்​கலாம்.

அந்​தப் போட்​டிகளில் பாகிஸ்​தானைச் சேர்ந்த அணி​கள் அல்​லது வீரர்​களும் கலந்​து​கொண்டு விளையாடலாம்.

அதே​போல், இந்​தியா நடத்​தும் இது​ போன்ற பல்​வேறு நாட்டு அணி​கள் பங்​கேற்​கும் போட்​டிகளில் பாகிஸ்​தான் வீரர்​களும் அணி​களும்​ பங்​கேற்​க முடி​யும்​. இவ்​வாறு அந்​த வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset