செய்திகள் விளையாட்டு
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
வாஷிங்டன்:
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி அமெரிக்காவின் எம்எல்எஸ் தொடரில் இந்தர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
இதில் இந்தர்மியாமியும் நியூ இங்கிலாந்து அணியும் அண்மையில் மோதின.
இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 2-1 என வென்றது.
இதில் 27, 38ஆவது நிமிடங்களில் கோல் அடித்து அசத்திய மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தப் போட்டியில் அடித்த இரண்டு கோல்களின் மூலம் இளம் வயதில் 870 கோல்களை நிறைவு செய்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
18 அடி பாக்ஸுக்கு வெளியே இருந்து 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.
அதிவேகமாக 870 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் மெஸ்ஸி தன்வசமாக்கியுள்ளார்.
எம்எல்எஸ் தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் இரண்டு கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையையும் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 9:40 am
தொடர்ந்து நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தை வென்று ஜேடிதி அணி வரலாறு படைத்தது
May 23, 2026, 4:43 pm
மீண்டும் களமிறங்கும் ‘பேர்லி-தினா’ ஜோடி
May 23, 2026, 3:36 pm
நட்புப் போட்டிகள் இன்றி ‘ஹரிமாவ் மலாயா’ பின்னடைவைச் சந்திக்குமா?
May 23, 2026, 9:53 am
அர்செனல் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றதை தொடர்ந்து ஹாமில்டன் கண் கலங்கினார்
May 23, 2026, 9:53 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிரந்தர நிர்வாகியாக கேரிக் நியமிக்கப்பட்டார்
May 22, 2026, 9:23 am
உலகக் கிண்ண அணியில் இடம் பிடித்த நெய்மார்: உற்சாகத்தில் ரசிகர்கள்
May 22, 2026, 9:09 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சாம்பியன்
May 21, 2026, 5:31 pm
ஜப்பானின் முன்னணி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் லெக்ஷனா
May 21, 2026, 9:18 am
