நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் மென்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் அர்செனல் அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை  மார்டின் ஒடாகர்ட், தோமஸ் பார்டி, மைலேஸ் லெவிஸ், காய் ஹாவர்ட்ஸ், ஈதன் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.

டோட்டன்ஹாம் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset