செய்திகள் தமிழ் தொடர்புகள்
பிப்ரவரி வரை கட்டாயம் முகக்கவரி அணிய வேண்டும்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை:
குறைந்தபட்சம் பிப்ரவரி வரையாவது மக்கள் கட்டாயம் முகக்கவரி அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியா 100 கோடி தடுப்பூசி இலக்கு நோக்கி சென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு ஒவ்வொரு மாநிலமும் தனது பங்கை செலுத்தி உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 5.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் 5.14 கோடி அரசு மூலமாகமும், 26 லட்சம் டோஸ் தடுப்பூசி தனியார் மருத்துவமனை மூலமாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது நம்மிடம் 53.84 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.
தமிழ்நாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதை கடமையுடன் கூடிய தளர்வுகள் என மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பிப்ரவரி மாதம் வரையாவது கட்டாயம் முகக்கவரி அணிய வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 11:52 am
லுங்கி அணிந்தபடி மூட்டைகளை தூக்கிச் செல்லும் புதுவை முன்னாள் அமைச்சர்: வைரலாகும் காணொலி
April 25, 2024, 6:56 pm
மோடியின் மத வெறுப்பு பிரசார பேச்சுக்கு சீமான் கடும் கண்டனம்
April 23, 2024, 5:20 pm
Aadhar Card: பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றங்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்
April 21, 2024, 11:23 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அபூர்வ வகை ஆமைக் குஞ்சுகள்
April 19, 2024, 11:24 pm