நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் எச்சூரி மறைவு: ஜவாஹிருல்லா இரங்கல்

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம்யெச்சூரி, சுவாசத் தொற்று பிரச்சினையால் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிர் நீத்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன் என்று மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிறந்த தோழர் யெச்சூரி கல்வியில் சிறந்த மாணவராக விளங்கியவர்.  எஸ்எப்ஐ மாணவர் இயக்கத்தில் தனது பொது வாழ்வைத் தொடங்கி பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்து அதன் பொதுச் செயலாளராக 9 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர். 

மாநிலங்களை உறுப்பினராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பான பல்வேறு முக்கிய மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், போலிட் பீரோ உறுப்பினர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இந்தியா கூட்டணி அமைவதற்கு இவரது பங்களிப்பு அளப்பரியது. 

சிறுபான்மையினருக்கு எதிராக எப்போதெல்லாம் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறதோ அப்போதெல்லாம் உடனடியாக எதிர்வினை ஆற்றிய உண்மையான தோழர். 

சச்சார் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்த போது அதன் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர். 

சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்த தோழர் யெச்சூரி அவ்வப்போது முக்கிய நாளிதழ்களில் அறிவார்ந்த கட்டுரைகளை எழுதியவர். 

இந்துத்துவம் குறித்தும் வகுப்புவாதம் குறித்தும் அவர் எழுதிய இரு ஆங்கில நூல்கள் தரமானவை.

தோழர் யெச்சூரியின் இறப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் இடதுசாரிதோழர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று 
எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset