நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் தேசியக் கூட்டணி இந்திய வேட்பாளரை களமிறக்க வேண்டும்: இராமசாமி

கோலாலம்பூர்:

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசியக் கூட்டணி இந்திய வேட்பாளரை களமிறக்க வேண்டும்.

உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி  இதனை அறிவித்தார்.

இந்திய வேட்பாளரை நிறுத்தினால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

மேலும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் ஆதரவையும் எதிர்க்கட்சி கூட்டணி பெரும்.

தேசியக் கூட்டணி இந்திய வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் பெரிய வரவேற்பையும் பெற முடியும்.

நம்பிக்கை கூட்டணி இந்திய சமுதாயத்தை புறக்கணித்து இருப்பதால் இந்திய வாக்காளர்களின் ஆதரவை எதிர்க்கட்சிக்கு திரட்டுவோம் என்று இராமசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset