நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலையோரத்தில் சுயநினைவின்றி கிடந்த தாதியர்; நெகிரி செம்பிலானில் பரபரப்பு 

சிரம்பான்: 

சாலையோரத்தில் சுயநினைவின்றி ஒரு பெண் தாதியர் மயக்கநிலையில் கிடந்ததைப் போலீசார் உறுதிப்படுத்தினர். சம்பந்தப்பட்ட தாதியரை  யாரோ பலமாக தாக்கியிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிப்பதாக கோல பிலா மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் ஷாருல் அனுவார் அப்துல் வஹாப் கூறினார். 

இரவு மணி 10 மணியளவில் தாதியர் செலுத்திய மைவி ரக கார் அருகில் அவர் இருந்ததைக் காவல்துறை அறிந்தனர். தலையில் பலமான காயம் ஏற்பட்டதால் அந்த தாதியர் மயங்கியிருக்கிறார். 

தாதியரிடம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் நம்பும் நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட தாதியரை துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். 

தலையில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தாதியரிடமிருந்து எந்தவொரு விலையுயர்ந்த பொருட்களும் கொள்ளையைடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 324 யின் கீழ் விசாரிக்கப்படுவதாக காவல் துறை தரப்பு தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset