நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனைவியின் காதலனை கொன்றதாக பெலாச்சான் தொழிற்சாலை ஊழியர் மீது குற்றச்சாட்டு

தெலுக் இந்தான்:

மனைவியின் காதலனை கொன்றதாக பெலாச்சான் தொழிற்சாலை ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பேரா தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 42 வயதான தனபாலன் மீது இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகள் புரிவதாக தனபாலன் தலையசைத்தார்.

ஆனால் கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் இருப்பதால் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மாலை சுமார் 6.30 மணியளவில் தெலுக் இந்தான் தாமான் டத்தோ நஸ்ரி லங்காப்பில் எஸ். சுந்தர்ராஜ்  என்பவரைக் கொன்றதாக தனபாலன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை,  12 கசையடிகளுக்குக் குறையாமல் தண்டனை விதிக்கப்படும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset