செய்திகள் மலேசியா
துப்பாக்கி ஏந்திய இஸ்ரேலியர் வழக்கில் நால்வர் கைது: ஐஜிபி
கோலாலம்பூர்:
மார்ச் 27-ஆம் தேதி ஜாலான் அம்பாங்கிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆறு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆடவருடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் நால்வரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய வழக்கின் விசாரணையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இன்று தொடர்பு கொண்ட பின்னர் நான்கு சந்தேக நபர்களின் கைது செய்யப்பட்டதை தேசியக் காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசேன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஜொகூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் மூன்று ஆண்கள், ஒரு பெண் என மொத்தம் நால்வரைக் காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
28 முதல் 41 வயதுக்குட்பட்ட அனைத்துச் சந்தேக நபர்களும் ஜொகூர், ஸ்கூடாய், கெலாங் பாதா மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு நபர்களுக்கு எதிராக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 12:54 pm
தஞ்சோங் மாலிமில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது: 2 பேர் உயிர் தப்பினர்
May 4, 2024, 12:19 pm
25,000 இலவச திறன் பயிற்சி: எச்ஆர்டி கோர்ப் வழங்குகிறது
May 4, 2024, 12:16 pm