நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாடு தரவு தளத்தில் தகவலை இன்னும் புதுப்பிக்க முடியும்

கோலாலம்பூர்: 

பாடு முதன்மை தரவு தளத்தில் பதிவு செய்தவர்கள், பதிவு காலக்கெடு முடிந்தாலும் தங்களின் தகவலைப் புதுப்பிக்க முடியும்.

பாடுவில் பதிவு செய்வதற்கான இறுதிநாள் மார்ச் 31 ஆகும் என்று தலைமை புள்ளியியல் நிபுணர் முஹம்மத் உசிர் மஹிடின் கூறினார்.

சில தகவல்களைத் தவறவிட்டவர்கள் அவர்களின் தேவையான தகவல்களைப் புதுப்பிக்கவோ அல்லது முழுமையாக செய்து முடிக்கவோ முடியும்.

மூன்று மாத அவகாசத்தில் பதிவு செய்யாதவர்கள் மட்டுமே இப்போது பதிவு செய்ய இயலாது. 

நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு தரவுகள் தேவை என்பதில் பொதுமக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இதை நிறைவேற்ற அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்றும் அவர் கூறினார்.

இதுவரை, 18 வயதுக்குட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உட்பட 17.65 மில்லியன் அல்லது நாட்டின் மக்கள்தொகையில் 58.7% பேர் பாடு முதன்மை தரவு தளத்தில் பதிந்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset