செய்திகள் மலேசியா
இஸ்லாம், போலீஸ்படைக்கு எதிராக அவமதிப்பு போலீஸ் விசாரணையைத் தொடங்கியது: ஐஜிபி
கோலாலம்பூர்:
இஸ்லாம், போலீஸ்படையை அவமதித்த ஆடவருக்கு எதிராக காவல்துறை விசாரணையை தொடங்கியது.
இதனை தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.
கணேஸ்பரன்நடராஜா என்ற பெயரை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ஆடவர் அவமதிப்பு வீடியோயை பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் அல்லாஹ் என்ற வார்த்தை கொண்ட காலுறைகளை விற்றது தொடர்பாக இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக 35 வயது நபர் மீது போலீஸ் ஏன் இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டை விட்டு வெளியேறியதாக பதிவுகள் காட்டுகிறது.
தற்போது ஜெர்மனியின் ஹம்பர்க்கில் வசிக்கும் சந்தேக நபருக்கு எதிராக பல குற்றங்களுக்காக 21 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாக ரஸாருடின் தெரிவித்தார்.
- பார்த்தபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 12:54 pm
தஞ்சோங் மாலிமில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது: 2 பேர் உயிர் தப்பினர்
May 4, 2024, 12:19 pm
25,000 இலவச திறன் பயிற்சி: எச்ஆர்டி கோர்ப் வழங்குகிறது
May 4, 2024, 12:16 pm