நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் மீண்டும் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது

மாரான்: 

மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் மீண்டும் இன்று புதன்கிழமை ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் திறக்கப்படுவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் வெள்ளம் புகுந்த நிலையில் தற்போது அதனை சுத்தம் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

முன்னதாக, இரு நாட்களுக்கு முன், மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆலயத்தைத் தற்காலிகமாக மூடுவதாக ஆலய நிர்வாகம் ஃபேஸ்புக் பதிவின் வாயிலாக அறிவித்திருந்தனர். 

தற்போது ஆலயத்தைச் சுத்தம் செய்யும் நடைபெற்று வருவதாக ஆலய நிர்வாகம் குறிப்பிட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset