நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அலுவலகத்தில் மது அருத்தினேனா; பன்றி இறைச்சி சாப்பிட்டேனா?  சுற்றுலா அமைச்சர் தியோங் மறுப்பு 

கோலாலம்பூர்: 

தமது அலுவலகத்தில் மது அருந்தியதோடு பன்றி இறைச்சியையும் உட்கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவலைச் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் தியோங் கிங் சிங் மறுத்துள்ளார்.

சுகாதார துறையின் முன்னாள் இயக்குநர் ஒருவரிடமிருந்து புலனம் வாயிலாக இந்தத் தகவல் பகிரப்பட்டு வந்ததைச் சுட்டிக்காட்டி தியோங் கிங் சிங் இவ்வாறு கருத்துரைத்தார். 

அடிப்படையற்ற வகையில் இவ்வாறு தமக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வருவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என்று தியோங் கிங் சிங் ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாகச் சொன்னார். 

மேலும், பன்றி இறைச்சி உண்டதோடு மட்டுமல்லாமல் அதனை முஸ்லிம் ஊழியர்களை வைத்து சுத்தம் செய்ய சொன்னதாகவும் தமக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 

யார் இம்மாதிரியான கூற்றுகளை வெளியிடுகிறார்கள் என்று தமக்கு தெரியாது என்றும் MOTAC அமைச்சின் ஊழியர்கள் இந்த விவகாரம் தொடர்பாக தம்மீது தகவல் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் தியோங் கிங் சிங் குறிப்பிட்டார்.

- மவித்ரன் கிருஷ்ணன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset