![image](https://imgs.nambikkai.com.my/985952-mumbai-rain.jpg)
செய்திகள் தமிழ் தொடர்புகள்
புயல் எச்சரிக்கை காரணமாக நாளை முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை 144 ரயில்கள் ரத்து
புதுடெல்லி:
‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை காரணமாக நாளை முதல் டிசம்பர் 6ம் தேதி வரை 144 ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் வரும் 4-ஆம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ஆம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாளை முதல் 7 ஆம் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 11:37 am
மோடியின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
July 26, 2024, 6:18 pm
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்
July 26, 2024, 5:21 pm
பிரபல தனியார் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மரணம்
July 25, 2024, 5:41 pm
தேவகோட்டையில் விஷ வண்டுகள் கடித்து 22 பெண்கள் மயக்கம்
July 25, 2024, 11:39 am
சென்னையைச்சுற்றி இன்று மாலையிலும் இரவிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
July 24, 2024, 11:02 am
மலேசியப் பயணி திருச்சி விமான நிலையத்தில் மயங்கி விழுந்து மரணம்
July 23, 2024, 9:27 am
மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாள்: உள்ளூா் விடுமுறையை அறிவித்தார் ஆட்சியா்
July 22, 2024, 3:32 pm