நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

இந்தியாவில் விரைவில் எத்தனாலிலேயே இயங்கும் பைக், கார்கள்

மும்பை:

எத்தனாலிலேயே முழுமையாக  இயங்கும் வாகனங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்றிய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மிண்சாரம், கேஸ் வாகன பயன்பாடு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரும்பில் இருந்து எடுக்கப்படும் எத்தனால், ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 சதவீதம் வரையில் கலந்து விற்கப்படுகிறது.

இந்நிலையில், நிதின் கட்கரி கூறுகையில், முழுமையாக எத்தனாலில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ ஸ்கூட்டர்ஸ் ஆகியவை அறிமுகம் செய்ய உள்ளன.

எத்தனாலில் இயங்கும் டொயோட்டோவின் கேம்ரி ரக கார் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தக் கார் இயங்கும்போது 40 சதவீத மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும். இதனால் இந்தக் காரை லிட்டர் ரூ.15 இயக்கிவிடலாம்' என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset