நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

5G தொடர்பிலான நற்செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும்: ஃபஹ்மி ஃபாட்சில் 

கோலாலம்பூர் :

5G எனப்படும் ஐந்தாம் தலைமுறை சேவை தொடர்பான சில நற்செய்திகள் குறித்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருகின்ற ஜூன் 30-ஆம் தேதி அறிவிக்கவுள்ளன. 

மேலும், 5G சேவைக்கு ஏற்றவாரு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்படுவதை உறுதி செய்ய அணுகல் ஒப்பந்தங்களில் அவை கையெழுத்திட்டுள்ளதாகத், தொடர்பு இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறியுள்ளார். 

அதுமட்டுமல்லாமல், டிஜிட்டல் நேஷனல் நிறுவனத்தின் கீழ் 5G சேவையின் செயலாக்கம் 62.1% முடிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், இணையப் பாதுகாப்பு தொடர்பிலான சட்டத்தை உருவாக்கும் முயற்சி தேசிய இணையப் பாதுகாப்பு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மலேசிய Cyber Security-இன் செயல்பாடுகளுடன் தேசிய இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் பணிகள் ஒன்றோடு ஒன்று பாதிக்காமல் இருக்கும் வகையில் அவை தெளிவுப்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.

அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset