நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை - அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இடையே சொகுசு கப்பல் இயக்கம்

கொழும்பு: 

இந்தியா-இலங்கை இடையேயான முதல் சொகுசுக் கப்பல் எம்.எஸ்.எம்பெரஸ், இலங்கையின் தென்கிழக்கில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தது.

இந்த சொகுசுக் கப்பல் சென்னையில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது.
அட்வான்டிஸ்' மற்றும் கார்டிலியா குரூசஸ் ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டாண்மையில் எம்.எஸ்.எம்பெரஸ் சொகுசுக் கப்பல் இயக்கப்படுகிறது.

1,600 பயணிகள், 600 பணியாளர்களுடன் முதல் பயணத்தை தொடங்கி அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்தது எம்.எஸ்.எம்பரெஸ் சொகுசுக் கப்பல்.

அடுத்த 4 மாதங்களுக்கு, சென்னையிலிருந்து புறப்பட்டு இலங்கையின் அம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய 3 துறைமுகங்கள் வழியே மீண்டும் சென்னைக்குத் திரும்பும்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset