நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இயக்குநர் பாக்யராஜின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்

சென்னை: 

தமிழ்த் திரையுலகின் மகத்தான ஆளுமையாக போற்றப்படும் மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று (ஜூன் 28) தகனம் செய்யப்பட்டது.

பிரபல இயக்​குநரும் நடிகரு​மான கே.​பாக்​ய​ராஜ், மாரடைப்​பால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், திமுக தலை​வர் ஸ்​டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள், ரஜினி​காந்த், கமல்​ஹாசன் உள்​ளிட்ட திரை​யுல​கினர் அஞ்​சலி செலுத்​தினர்.

நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள வீட்​டிலிருந்து இன்று காலையில் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வழிநெடுகிலும் பொதுமக்கள் பாக்யராஜின் உடலுக்கு மலர்களை தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வல வாகனத்தில் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு ஆகியோர் இருந்தனர்.

பெசன்ட் நகர் மின் மயானத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாக்யராஜ் உடலுக்கு இறு​திச் சடங்​கு​கள் நடை​பெற்றன. அவரின் இறுதி சடங்கில் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 

பாக்யராஜின் உடலுக்கு அவரது மகன் சாந்தனு இறுதி சடங்குகளை செய்தார். அதன் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset